1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 3 டிசம்பர் 2019 (13:03 IST)

கட்சி பேர சொல்லி வர எவனையும் நம்பாதீங்க.. சொந்த நிர்வாகிகளை நாரடித்த கருணாஸ்!

முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிர்வாகிகள் யாரையும் நம்பாதீர்கள் என கருணாஸ் கூறி இருப்பது கட்சி நிர்வாகிகளுக்கு மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ராமநாதபுரத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரோடு திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவும்,  முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவருமான கருணாஸ் கலந்துக்கொண்டார். இந்த கூட்டத்தில் தனது கட்சி நிர்வாகிகள் குறித்து அவர் பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. கருணாஸ் பேசியதாவது... 
 
நான் நடத்தி வரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிர்வாகிகள் அரசிடம் உதவிகள் பெற்றுத்தருவதாக வந்தால் மக்கள் அவர்களை நம்ப வேண்டாம். என் தொகுதி மக்களுக்கு ஏதாவது குறைகள் இருந்தால், அதை நேரடியாக என்னிடம் தெரியப்படுத்துங்கள். 
குறைகள் தொடர்பான மனுக்களை என்னிடமே நேரடியாக வழங்கலாம். நான் இல்லை என்றால் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலோ அல்லது அரசு அதிகாரிகளிடமோ கொடுங்கள் என கூறியுள்ளார். 
 
கருணாஸ் தனது நிர்வாகிகளை நம்பவேண்டாம் என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தினாலும், அவர் ஏன் இவ்வாறு கூறினார் என்பது புரியாத ஒன்றாக உள்ளது.