1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : வியாழன், 12 செப்டம்பர் 2019 (19:29 IST)

இருவரும் பதவி விலகுங்கள்...உங்கள் ஈகோவுக்கு சங்கம் முடங்கவேண்டுமா? - கருணாஸ் !

தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடத்தின் வளர்ச்சியை தடுக்கும் வேலைகளை மறைமுகமாக இருந்துகொண்டு செயல்பட்டு வரும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உடனடியாக பதவி விலக வேண்டும் என நடிகரும் எம். எல்.ஏவுமான கருணாஸ் தெரிவித்துள்ளார். 



 
பழனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், யாராக இருந்தாலும் அவரவரின் சொந்த ஈகோவை விட்டுவிட்டு பொது பிரச்னையை தீர்க்க முன் வர வேண்டும். ஐசரி கணேசனுக்கும் , நடிகர் சங்கத்தின் பொது செயலாளராக  போட்டியிட்டிருக்கும் விஷால் அவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்னையை விட்டு விட்டு சங்கத்தின் நலன் கருதி இருவரும் உடனடியாக ஒரு உறுதியான முடிவை எடுக்கவேண்டும். இல்லையேல் இருவரும் சங்கத்தை விட்டு விலகி இருக்கவேண்டும். 
 
மேலும் நடிகர் சங்கத்தின் முன்னேற்றத்திற்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பின்னிருந்துக்கொண்டு பல வேலைகளை செய்து கட்டிடம் திறப்பட்டதற்கு தடையாக இருந்து செயல்பட்டு வருகிறார். தற்போது நடிகர் சங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது தான் அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கையாக இருக்கிறது. எனவே அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள பிரச்னை நீண்டுகொண்டே போனால் இருவரும் உடனடியாக பதவி விலகவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.