Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்மை நின்றது; நீதி வென்றது: சிறையிலிருந்து விடுதலையான கருணாஸ் பேட்டி

Updated: சனி, 29 செப்டம்பர் 2018 (08:32 IST)
கடந்த 16ஆம் தேதி நகைச்சுவை நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழக முதல்வரையும் காவல்துறை அதிகாரி ஒருவரையும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதோடு, ஜாதி மோதல்களை தூண்டும் வகையில் பேசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது 'ஐபில் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியதாகவும் இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து இரண்டு வழக்குகளில் இருந்தும் தனக்கு ஜாமீன் வேண்டும் என கருணாஸ் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நேற்று அவருக்கு இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததையடுத்து இன்று காலை கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் அவர் தினமும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களுக்கு ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விடுதலைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், 'இன்னும் ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன் என்மீதான வழக்கில் உண்மை நின்றது; நீதி வென்றது என்று ஆவேசமாக கூறினார்.

எல்லாம் காட்டு

சபரீசனுக்கு சம்பந்தம் இருக்குன்னு நிரூபிச்சா 5 ஆயிரம் கோடி!.. GSquare நிறுவனர் பால ராமஜெயம் பேட்டி..

பெண் அரசு அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா விவசாயி? குற்றத்தை ஏற்க மறுத்த நீதிபதி...

Grand Chess Tour சாம்பியன் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தா!. முதல் இந்தியராக சாதனை!...

சீனாவில் ஒரே இரவில் உடைந்த 60 அணைகள்.. வெளியேறிய 70 கோடி கன மீட்டர் தண்ணீர்.. உலகம் இதுவரை பார்க்காத பேரழிவு...

அடுத்த கட்டுரையில்
Show comments