தொடர்புடைய செய்திகள்
- மருத்துவமனையில் மதுசூதனன்; வதந்திகளை நம்ப வேண்டாம்! – அதிமுக ட்வீட்!
- இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் கனமழை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
- எந்தெந்த எண்ணெய்களில் விளக்கு ஏற்றக்கூடாது...? அறிந்துகொள்வோம்
- திருமணங்களில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதன் அர்த்தம் !
- எச்.ஐ.வி பாதித்தவர்கவர்களும் தடுப்பூசி போடலாம்!
”இந்தி ஒழிக”ன்னு சொன்னா பத்தாது; “தமிழ் வாழ்க”ன்னு சொல்லணும்! – கமல்ஹாசன் அறிக்கை!
தமிழக அரசு தமிழ் மொழி வளர்ச்சிக்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும் என கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “கடுமையான முயற்சிகளுக்கு பிறகு கலைஞர் கருணாநிதி அவர்கள் 2004ம் ஆண்டில் தமிழை செம்மொழியாக்கி வெற்றியை ஈட்டி தந்தார். செம்மொழியாக அறிவிக்கப்பட்டு 17 ஆண்டுகள் ஆகியும் மொழி வளர்ச்சிக்கு பெரிய அளவிலான முயற்சிகள் எடுக்கப்படவில்லை” என கூறியுள்ளார்.
மேலும் “இளமையில் திராவிட இயக்கதால் ஈர்க்கப்பட்டு இந்தி எதிர்பாளன் ஆனேன். பிறகு இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்தபோது தமிழை விட சிறந்த மொழி இல்லை என்பதை உணர்ந்தேன். இந்தி ஒழிக என்று முழக்கமிடுவதோடு நின்று விடாமல் தமிழ் வாழ்க என்றுரைக்க மொழி வளர்ச்சி நடவடிக்கைகள் தேவை. தமிழ் மொழி வளர்ச்சிக்கென தமிழக அரசு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டியதும் தமிழ் வளர்ச்சிக்கென அதிக அளவில் நிதி ஒதுக்கி தீவிரமாகப் பணியாற்ற வேண்டியதும் நம்முடைய வரலாற்றுக் கடமை. pic.twitter.com/6WRZJp6KKH
— Kamal Haasan (@ikamalhaasan) July 20, 2021
அடுத்த கட்டுரையில்
