வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 17 டிசம்பர் 2018 (20:47 IST)

'முதல்வன்' பட பாணியில் அதிகாரியிடம் போனில் பேசிய கமல்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த 'முதல்வன்' திரைப்படத்தில் ஒருநாள் முதல்வராகும் அர்ஜூன், மக்களிடம் குறை கேட்டு அதுகுறித்து போனில் அதிகாரியிடம் பேசுவார். சரியாக பதில் சொல்லாத அதிகாரிகளுக்கு சஸ்பெண்ட் ஆர்டரை பேக்ஸில் அனுப்புவார். இந்த காட்சி படத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதேபோன்று நடிகர் கமல்ஹாசன் இன்று கொடைக்கானலில் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, மக்கள் கூறிய ஒரு புகாரை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் உடனே போன் செய்து கமல்ஹாசன் கேட்டார்.

கொடைக்கானலில் உள்ள ஒரு பகுதியில் அரசு பொதுமக்களுக்கு வீடு கட்டி தரும் திட்டம் ஒன்றில் ஊராட்சி அதிகாரி ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கமல்ஹாசனிடம் மக்கள் புகார் கூறினர். உடனே தனது செல்போனில் ஊராட்சி அதிகாரியை தொடர்பு கொண்டு பேசி வீடுகட்ட அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், அவ்வாறு கேட்காமல் இருக்கும்படி பார்த்து கொள்வதாகவும் கூறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.