1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 21 நவம்பர் 2021 (14:22 IST)

ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பு: கி.வீரமணி கண்டனம்!

ஐஐடி கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு திராவிட கழக தலைவர் கி வீரமணி அவர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் ஐஐடி பட்டமளிப்பு விழா நடைபெற்றது என்பதும் இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி அவர்கள் கூறுகையில் திட்டமிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் புறக்கணித்துள்ளனர் என்றும் தமிழ்நாடு அரசும் கல்வியாளர்களும் உரிய கண்டனத்தை பதிவு செய்தது மிக முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ஐஐடி தரப்பிலிருந்து என்ன விளக்கம் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.