1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 30 ஜூலை 2018 (17:56 IST)

கருணாநிதி காலத்திற்கு பிறகு என்செய்வேன்? அன்றே சொன்ன ஜெயலலிதா!

திமுக தலைவர் கருணாநிதி கடந்த மூன்று நாட்களாக உடல் நலமின்றி சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரது கையசைவை காண பல தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு காத்துக்கிடக்கின்றனர். மேலும், பல அரசியல் தலைவர்களும் அவரை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து நலம் விசாரித்து வருகின்றனர். 
 
இந்த சூழ்நிலையில், அவரை பற்றிய பல செய்திகளும், பல தெரியாத் தகவல்களும் வெளியாகின்றன. அந்த வகையில் மறைந்த முதலைமச்சர் ஜெயலலிதா கருணாநிதி பற்றி ஒரு பேட்டியில் கூறியது தற்போது பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. 
 
பத்திரிக்கையாளர் ஒருவர், கருணாநிதியின் காலத்திற்கு பிறகு உங்கள் அரசியல் எப்படி இருக்கும் என கேட்டதற்கு, நான் அரசியலை விட்டு ஒதுங்கிவிடுவேன் என சிரித்துக்கொண்டே பதிலளித்தார். 
 
ஏன், என பத்திரிக்கையாளர் கேட்டதற்கு, அவரை எதிர்த்து அரசியல் செய்யவே, நான் எனக்கு பிடிக்காத அரசியலுக்குள் நுழைந்தேன். அவர் காலத்திற்கு பிறகு யாரை எனக்கு தகுதியான எதிரியாக நினைத்து அரசியல் செய்ய முடியும் என பதில் அளித்துள்ளார்.