தொடர்புடைய செய்திகள்
- ஆளுநர் ஆர்.என்.ரவியை டிஸ்மிஸ் செய்து கைது செய்ய வேண்டும்: முத்தரசன் பேட்டி
- ஆளுனர் ரவி புகார் எதிரொலி: தமிழக தலைமை செயலாளர் இறையன்புவுக்கு நோட்டீஸ்..!
- மணிப்பூரில் கலவரத்தைக் கட்டுப்படுத்த போராட்டக்காரர்களை கண்டதும் சுட ஆளுனர் உத்தரவு
- திமுக அரசின் அரசின் பிடியிலிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும்: அண்ணாமலை
- ஆளுநர் மாளிகை செலவில் விதிமீறல் என்பது பொய்: பிடிஆர் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில்..!
ஆளுனரே சொல்லிவிட்டார், திமுக ஆட்சியை கலைக்க வேண்டும்: ஜெயக்குமார்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஆளுனரே சொல்லிவிட்டார் என்றும் அதனால் திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று நேற்று ஆங்கில உலகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஆளுநர் ரவி தெரிவித்து இருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு திமுக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறியுள்ளார். எனவே 356ஐ பயன்படுத்தி ஆட்சியை ஆளுநர் கலைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran
