1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Jallikattu in Tamil Nadu started

மாஸாய் துவங்கிய ஜல்லிக்கட்டு!

ஜல்லிக்கட்டு
தமிழகத்தில் தை பொங்கலை ஒட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. 

 
தமிழகத்தில் தை பொங்கலை ஒட்டி நடைபெறும் பாரம்பரிய மாடுபிடி போட்டியான ஜல்லிக்கட்டு உலக அளவில் பிரபலம் வாய்ந்தது. இந்த முறை கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இன்று  காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
 
தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். 700 காளைகளும் பங்கேற்கின்றன. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே தற்போது கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. 
About Writer
Sugapriya Prakash