ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 5 ஜூன் 2022 (12:10 IST)

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி: விமான நிலையத்தில் கூடுதல் வசதிகள்

Airport
மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை  முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள் என சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கபட்டுள்ளது.

மீனம்பாக்கம் சர்வதேச 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் நடப்பதை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு குடியுரிமை சுங்கச் சோதனை உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பு தனி கவுன்டர்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதில், 200 நாடுகளைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர் வீரரங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.