தொடர்புடைய செய்திகள்
- மனநலம் பாதிக்கப்பட்ட 65-வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் கைது!
- தமிழகத்தின் பல மாவட்டங்களில் நள்ளிரவில் கனமழை: பள்ளிகள் விடுமுறை..!
- பணியில் போது உயிரிழந்த காவலர்களின் வீர வணக்க தினத்தை முன்னிட்டு காவல் நிலையத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுத்த காவல் துணை கண்காணிப்பாளர்
- பிஜேபி அரசு ஒருமையில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு ஒரு சார்புடைய அரசாங்கமாக செயல்படுகிறது - காங்கிரஸ் தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே பேச்சு......
- திமுகவினர் இரு தரப்பினர் பட்டாசு வெடிப்பதில் ஒருவருக்கொருவர் மோதல் பரபரப்பு!
கொசுக்கடியில் இருந்து தப்பிக்க நவீன டீசர்ட் அறிமுகம்.. நிறம் மாறும் மாயாஜாலம்..
கொசுக்கடியில் இருந்து தப்பிக்க, நவீன டி-ஷர்ட் ஒன்றை திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த டி-ஷர்ட் அணிந்தால், உடல் வெப்பத்திற்கு ஏற்ப நிறம் மாறும் என்றும் கூறப்படுகிறது.
திருப்பூரில் இருந்து டி-ஷர்ட்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், புதிய வகையான நவீன டி-ஷர்ட்களும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வெப்பநிலை மாற்றத்தை வெளிப்படுத்தும் டி-ஷர்ட், செம்பருத்தி பூ, வெங்காய சருகு உள்ளிட்ட இயற்கையான பொருட்களை வைத்து பிரிண்ட் செய்யப்பட்டுள்ள இங்க் துணியால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த டி-ஷர்டை அணிந்தால், உடல் வெப்பம் 99 டிகிரி பாரன்ஹீட்டை அடையும் போது டி-ஷர்டின் நிறம் மாறும்; வெப்பநிலை குறைந்த பிறகு, மீண்டும் பழைய நிறத்திற்கு மாறும். இதன் மூலம் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உடல் வெப்பத்தின் அடிப்படையில் காய்ச்சல் இருப்பதை அறிய முடியும்.
மேலும், இந்த டி-ஷர்ட்டில் உள்ள தொழில்நுட்பம் மூலம் கொசுக்கடியிலிருந்து தப்பிக்கலாம். இந்த டி-ஷர்ட், பின்லாந்தில் நடைபெற இருக்கும் கண்காட்சியில் பங்கேற்க இருப்பதாகவும், பல வண்ணங்களில் இயற்கையான பிரிண்ட் மூலம் டீசர்ட் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், டி-ஷர்ட் தயாரித்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
