1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 16 ஜனவரி 2022 (12:44 IST)

மார்ச் மாதம் வரை விமானங்கள் ரத்து: இண்டிகோ அறிவிப்பு!

வரும் மார்ச் மாதம் வரை ஒரு சில விமான சேவைகளை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது
 
பயணிகள் வரத்து குறைவாக இருப்பதால் ஒரு சில நகரங்களுக்கு இடையிலான விமான சேவையை ரத்து செய்ய இண்டிகோ நிறுவனம் முடிவு செய்ததாக ஏற்கனவே செய்தி வெளியானது 
 
இந்த நிலையில் திருச்சி - டெல்லி மற்றும் திருச்சி - கொழும்பு ஆகிய விமான சேவைகளை மார்ச் மாதம் வரை ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது
 
அதேபோல் திருச்சி - பெங்களூர் செல்லும் காலை விமானம் மட்டும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் விமான பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிர்வாகம் அறிவித்துள்ளது.