ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 அக்டோபர் 2022 (10:32 IST)

தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படை: நடுக்கடலில் பதட்டம்!

fishermen
பொதுவாக இலங்கை கடற்படையினர் தான் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு வரும் நிலையில் தற்போது இந்திய கடற்படையே தமிழக மீனவர் மீது துப்பாக்கியால் சுட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
மன்னார் வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்கள் படகு ஒன்று சென்ற போது அந்த படகை நிறுத்துமாறு இந்திய கடற்படை கட்டளையிட்டது. ஆனால் அந்த படகு நிற்காமல் சென்றதை அடுத்து சந்தேகமடைந்த இந்திய கடற்படையினர் , படகின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்
 
இதில் படகில் இருந்த மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் காயமடைந்தார். அதன் பின்னர்தான் அவர்கள் மீனவர்கள் என்று தெரிய வந்ததை அடுத்து காயமடைந்த மீனவரை இந்திய கடற்படையினர்களே மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் 
 
சொந்த நாட்டு மீனவர்களையே இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva