1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சிவகங்கை , வியாழன், 9 மே 2024 (14:25 IST)

திமுக சார்பில் நீர் மோர் பந்தல்- அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் திறந்து வைத்தார்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது.
 
இதனால் பொது மக்கள் முதியோர் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
 
இதை கருத்தில் கொண்டு  திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தலை திறக்க திமுக தலைவர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார்.
 
அதனைத்தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் நீர்மோர் பந்தலை சிவகங்கை திறந்து வைத்தார்.
 
இந்நிகழ்ச்சியினை சிவகங்கை திமுக சார்பில் நகர்மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் மற்றும் கவுன்சிலர் வீனஸ்ராமநாதன்,
அயலக்க அணி மாவட்ட தலைவர் கேப்டன் சரவணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
 
பொது மக்களுக்கு நீர்,மோர், தர்பூசணி, இளநீர், சர்பத்  பொதுமக்களுக்கு வழங்கினார்.