தொடர்புடைய செய்திகள்
- ஸ்மார்ட் கார்டில் காஜல்: அமைச்சரின் சூப்பர் விளக்கம்...
- பழைய ரேஷன் கார்டுக்கு உணவுப்பொருள் இல்லை; அரசு அறிவிப்பு!
- ரேஷன் கார்ட்டுடன் ஆதார் எண் இணைப்பு: மத்திய அரசு புதிய அறிவிப்பு!!
- பழைய பேப்பர் கடையில் ஸ்மார்ட்கார்ட் விண்ணப்பங்கள்: அதிர்ச்சி தகவல்
- ஒரு கிராமம் முழுக்கவே பிழையான ஸ்மார்ட் கார்ட்: பொதுமக்கள் அதிர்ச்சி
ஸ்மார்ட் கார்டு இல்லையெனில் ரேஷன் பொருள் கட் - தமிழக அரசு அறிவிப்பு
ஸ்மார்ட் கார்டு இல்லையெனில் வருகிற மார்ச் மாதம் முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 85 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பலருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
முதலில், ஜனவரி 1 முதல் ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கே ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்க வேண்டும் என அனைத்து ரேஷன் கடை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி முடிவடையாததால் பிப்ரவரி 28ம் தேதி அந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
எனவே, மார்ச் 1ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் உணவு வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
