1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Highway canteen closed after passengers complaint

தரமற்ற உணவு; பயண வழி உணவகத்திற்கு தடை! – போக்குவரத்துத்துறை அதிரடி!

Tamilnadu
மாமண்டூரில் செயல்பட்டு வந்த பயண வழி கேண்டீனில் தரமற்ற உணவு அளித்ததால் அந்த உணவகம் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் பேருந்துகள் வழியாக நெடுந்தூரம் பயணிப்பவர்கள் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சினை பயண வழி கேண்டீன்கள். பயண வழி கேண்டீன் உணவகங்கள் பலவற்றில் தரமற்ற உணவுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாமண்டூர் பயண வழி உணவகத்தின் மீதும் தொடர் புகார்கள் எழுந்து வந்த நிலையில் அந்த உணவகம் செயல்பட போக்குவரத்துத்துறை தடை விதித்துள்ளது. அரசு பேருந்துகள் இனி அவ்வுணவகத்தில் நிற்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் புதிய தரமான உணவகத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பிபின் ராவத் பஞ்சலோக சிலை: கடலூர் முதல் டெல்லிவரை கொண்டு செல்ல திட்டமிடும் முன்னாள் ராணுவத்தினர்