வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (17:36 IST)

நீட் மசோதா நிராகரிப்பு தகவலை தமிழக அரசு வெளியிடாதது ஏன்?? உயர்நீதிமன்றம் கேள்வி

நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு தகவலை தமிழக அரசு இரண்டு ஆண்டுகளாக வெளியிடாதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசு 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி தமிழக அரசுக்கு,3 நாட்களில் நீட் விலக்கு மசோதாவை நிராகரிப்பு செய்து திருப்பி அனுப்பியதாகவும்,  இந்த தகவலை தமிழக அரசு இரண்டு ஆண்டுகளாக எந்த பொதுத்தளத்திலும் ஏன் வெளியிடவில்லை எனவும் உயர்நீதிமன்றனம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீட் விலக்கு மசோதாவை பற்றி மக்கள் பரவலாக பேசி வந்த நிலையிலும் தமிழக அரசு மௌனம் காத்தது ஏன்? எனவும், புதிய மசோதா நிறைவேற்ற விதிகள் இருந்தும் தமிழக அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தது எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் ஆறு மாதத்திற்குள் தமிழக அரசு மசோதாவை அனுப்பினால், குடியரசுத் தலைவர் பரீசிலிக்கலாம் எனவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இதைத் தொடர்ந்து பிரின்ஸ் கஜேந்திரபாபு தொடுத்த நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் பெறவேண்டும் என்ற வழக்கை ஆகஸ்டு 13 ஆம் தேதி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இது குறித்த ஆவணங்களை ஆகஸ்டு 8 ஆம் தேதிக்குள் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.