தொடர்புடைய செய்திகள்
- 12000 கோயில்களில் பூஜை செய்ய கூட வருமானம் இல்லை – அறநிலையத்துறை அறிவிப்பு!
- திராணி இருந்தா நேரா மோதுங்க.. இப்படி பண்ணாதீங்க! – போலி ட்வீட்டுக்கு பாஜக கண்டனம்!
- மது விற்பனை ரூ.183 கோடி! ஒரே நாளில் கல்லா கட்டிய டாஸ்மாக்
- மகள், வளர்ப்பு மகள் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை! – கொடூர தந்தை கைது!
- ”மதுரை மீண்ட சுந்தரபாண்டியரே” – செல்லூராருக்கு செமையான வரவேற்பு!
8 மாவட்டங்களுக்கு காத்திருக்கு செம மழை! – வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட சில பகுதிகள் மழை பெய்து வரும் நிலையில் மேலும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முதல் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்துள்ளது.
இந்நிலையில் அடுத்த 24 மனி நேரத்தில் தமிழக கடற்கரையோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நீலகிரி, வேலூர், கோயம்புத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டம்ங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
