தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இத்தனை ஆயிரமா?
- புதுவை பல்கலைக்கழகம் நாளை முதல் மூடப்படுவதாக அறிவிப்பு: ஹாஸ்டல் மாணவர்கள் அதிர்ச்சி
- வெளிமாநில தொழிலாளர்கள் அச்சம் அடைய வேண்டாம்: தமிழக அரசு
- எம் எஸ் பாஸ்கர் மகள் திருமணம்… திரையுலகினர் கலந்துகொண்டு வாழ்த்து!
- சென்னை அணி முக்கிய வீரருக்குக் காலில் காயம்… அடுத்த போட்டியில் விளையாடுவாரா?
டாடா, அம்பானியின் பங்களிப்பு இதோ, சன் குழுமத்தின் பங்களிப்பு என்ன? ஹெச்.ராஜா கேள்வி
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு டாடா மற்றும் அம்பானி நிறுவனங்கள் உதவி செய்து கொண்டிருக்கும் நிலையில் சன் குழுமத்தின் பங்களிப்பு என்ன?? என்று ஹெச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதிகரித்து உள்ளது. இதனை அடுத்து அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் நாள்தோறும் 700 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது
அதே போல் டாட்டா குழுமம் தினமும் 200 முதல் 300 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி தினமும் 400 டன் ஆக்சிஜனை இலவசமாக JSW நிறுவனம் தந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சன் குழுமத்தின் பங்களிப்பு என்ன என்ற கேள்வியை ஹெச் ராஜா எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
அம்பானி குழுமம் நாள்தோறும் 700 டன் ஆக்ஸிஜன், டாடா குழுமம் தினமும் 200-300 டன், JSW தினமும் 400 டன் ஆக்ஸிஜன் இலவசமாகத் தருகிறது. சன் குழுமத்தின் பங்களிப்பு என்ன?
