தொடர்புடைய செய்திகள்
- 20 நிமிடமே நீடித்த மீட்டிங்... திமுக - காங். டீல் ஓகேவா?
- அதிமுகவுக்கு டெண்டர் ஆட்சி; மக்களுக்கு தெண்ட ஆட்சி! – ரைமிங்கில் ஆவேசமான ஸ்டாலின்!
- அதுக்குள்ள இன்னொன்னா? ஹாட்ரிக் அடிக்கும் புயல்!? மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை!
- புரெவி புயல் எதிரொலி: சென்னை உள்பட தமிழகம் முழுவது கனமழை!
- நடராஜை வாழ்த்தி அறிக்கை வெயிட்ட கேப்டன் விஜயகாந்த்
போச்சா போச்சா... உச்சாணிக்கு ஏறும் தங்கம் விலை!
தீபாவளிக்கு பிறகு குறைய துவங்கி வந்த தங்கத்தின் விலை இன்று மூன்றாவது நாளாக ஏற்றத்தை கண்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.
இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை தீபாவளிக்கு பிறகு ஒரு வாரத்திற்கு விலையில் சரிவை சந்தித்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஏற்றத்தை கண்டுள்ளது.
ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ. 37,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.30 உயர்ந்து ரூ. 4,641-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
