1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2022 (15:21 IST)

நாளை உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வு பகுதி.. தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை

storm
நாளை வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகிறது என்றும் அதன் காரணமாக தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பது குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் புதுவை நோக்கி நகரக் கூடும் என்பதால் சென்னையில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
மேலும் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் கள்ளக்குறிச்சி கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேலும் தென் தமிழக கடலோர பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
Edited by Mahendran