1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 4 மார்ச் 2020 (16:17 IST)

அதிமுக முன்னாள் எம்.பிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை ! நீதிமன்றம் தீர்ப்பு !

அதிமுக முன்னாள் எம்.பிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை ! நீதிமன்றம் தீர்ப்பு !

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்பி ராமச்சந்திரன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் பிற்பகலில் ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், வங்கு மேலாளருக்கு 5 ஆண்டுகள் தண்டனையும் விதித்துள்ளது நீதிமன்றம். 
 
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி எம்.பியாக 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இருந்தவர் கே.என்.ராமச்சந்திரன் ஆவார்.
 
இவர் தனது கல்லூரி விரிவாக்கத்துக்காக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற்றதில் மோசடி என புகார் தெரிவிக்கப்பட்டது.
 
இதுகுறித்த வழக்கில் எம்பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று, அதிமுக முன்னாள் எம்பி ராமச்சந்திரன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது, சிறப்பு நீதிமன்றம் ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், வங்கு மேலாளருக்கு 5 ஆண்டுகள் தண்டனையும் விதித்துள்ளது.