தொடர்புடைய செய்திகள்
- இஷ்டத்திற்கு உடை உடுத்துவது தான் பெண்ணுரிமையா? : தமிழிசை செளந்திரராஜன்
- உக்ரைனுக்கு இனி மீட்பு விமான சேவை இல்லை: விமான போக்குவரத்து துறை அமைச்சர்
- சர்வதேச விமான டிக்கெட் விலை: 50 சதவீதம் வரை குறைய வாய்ப்பு!
- 2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான சேவைக்கு அனுமதி!
- ஒருநாள் முதல்வர் போல.. ஒருநாள் போலீஸ்! – புதுச்சேரியில் புதுமை!
மார்ச் 27 முதல் புதுச்சேரியில் பயணிகள் விமானம்: தமிழிசை தகவல்
மார்ச் 27 முதல் புதுச்சேரியில் பயணிகள் விமானம் இயக்க இருப்பதாக ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மார்ச் 27 ஆம் தேதி முதல் புதுச்சேரி மாநிலத்தின் விமான சேவை துவங்க இருக்கிறது. பல்வேறு கட்ட முயற்சிக்கு பின் இந்த சேவை கிடைக்கப்பெற்றுள்ளது.
அதற்கு நான் பிரதமருக்கும் ,விமான துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறேன்
புதுச்சேரி வளர்ச்சிக்கு விமான சேவை முக்கியம்.புதுச்சேரி சுற்றுலாதுறை வளர்ச்சியடைவதற்கும் ,புதுச்சேரியொட்டியுள்ள கடலூர் ,நாகை, திருவாரூர் மக்களுக்கு இது உதவிகரமாக அமையும்
புதுச்சேரியில் இருந்து கிளம்பும் முதல் பயணிகள் விமானத்தில் நான் பயணம் செய்ய போகிறேன் என கவர்னர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
