தொடர்புடைய செய்திகள்
- ஒருத்தர் ஏந்துனா பிச்சை..பலர் ஏந்தினால் இலவசம்! – சீமான் பேச்சு!
- கீழடியில் பண்டைய நெல் சேமிப்பு கலன் கண்டுபிடிப்பு!
- குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையா? – அதிமுக அறிக்கை மீது புகார்!
- தமிழகத்தில் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடும் கரூர்? – தேர்தல் நடத்துவது எப்படி?
- ஜெயலலிதா விவகாரத்தை கிளறும் திமுக! – அதிமுக புகார்!
தமிழகத்தில் மட்டும் ரூ.217 கோடி ரொக்கம், பரிசுபொருள் பறிமுதல்! – தேர்தல் ஆணையம்!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த 19ம் தேதி வரை தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணம், பரிசு பொருள் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்நிலையில் தேர்தல் கட்டுப்பாடுகளை மீறி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப்பொருட்கள் மற்றும் மது பாட்டில்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி வரை மொத்தமாக ரூ.217 கோடி மதிப்புள்ள ரொக்க பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 80 கோடியே 88 லட்சம் ரூபாய் பணமும், 136 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
