1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 16 மே 2023 (07:46 IST)

மின்சார ரயிலில் இருந்து திடீரென கழன்ற ரயில் பெட்டிகள்: சென்னையில் பரபரப்பு..!

சென்னை புறநகர் மின்சார ரயில் இருந்து எட்டு பெட்டிகள் கழன்றதை அடுத்து பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சென்னை மக்களின் பயண தேவையை பூர்த்தி செய்வதில் மின்சார ரயில்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்பதை தெரிந்ததே. இந்த நிலையில் சைதாப்பேட்டை அருகே புறநகர் மின்சார ரயிலில் இருந்து திடீரென எட்டு பெட்டிகள் கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். 
 
சென்னை கடற்கரை தாம்பரம் ரயில் சேவை இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தண்டவாளத்திலிருந்து பெட்டிகளை மீண்டும் சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இதன் காரணமாக கடந்த சில மணி நேரங்களாக மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால் பள்ளி கல்லூரி அலுவலகம் செல்லும் தொழிலாளர்கள் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Editred by Siva