1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (14:58 IST)

பேனா சின்னம் அமைக்கும் காசில் மக்கள் அனைவருக்கும் பேனா வாங்கி கொடுக்கலாம்: ஈபிஎஸ்

pen
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நினைவாக பேனா சின்னம் அமைக்க தமிழக மக்கள் அனைவருக்கும் பேனா வாங்கி கொடுத்து விடலாம் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களின் நினைவாக ரூபாய் 50 கோடியில் பேனா சின்னம் மெரினா அருகே அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது
 
இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து கூறும்போது தமிழகத்தில் போதுமான நிதியே இல்லாதகிறபோது மெரினாவில் பேனா சின்னம் அமைப்பது அவசியமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் 
 
மேலும் பேனா சின்னம் அமைக்கும் ரூபாய் 80 கோடியில் தமிழக மக்கள் அனைவருக்கும் பேனா வாங்கிக் கொடுத்து விடலாம் என அவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது