தொடர்புடைய செய்திகள்
- 1500 மின்சாரப் பேருந்துகள்: டெண்டரை பெற்றது டாட்டா மோட்டார்ஸ்
- ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை: ஈபிஎஸ் கடிதத்தை நிராகரிக்க கோரிக்கை!
- ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்றுங்கள் - பிரதமர் மோடி
- கோர்ட்ல கேஸ் போயிட்டிருக்கு.. ஈபிஎஸ் கடிதத்தை கண்டுக்க வேண்டாம்! – ரவீந்திரநாத் கடிதம்!
- ஓ.பி ரவீந்திரநாத் அதிமுக எம்.பி இல்லை..! – மாநிலங்களவைக்கு எடப்பாடியார் கடிதம்!
டெல்லி பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி: என்ன காரணம்?
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு சென்னை திரும்பி விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
டெல்லியில் நடைபெறும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் பிரிவு உபச்சார விழாவில் கலந்துகொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று இருந்தார்.
இதனை அடுத்து அவர் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட ஒருசில பிரபலங்களையும் சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திடீரென பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டவர்களை சந்திக்காமல் ஜனாதிபதியின் பிரிவு உபச்சார விழாவில் மட்டும் கலந்து கொண்டு விட்டு அவர் சென்னை திரும்பி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் சில விபரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
