ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 21 நவம்பர் 2018 (14:21 IST)

எடப்பாடி சார் இதுக்கு தான் டெல்லிக்கு போறாரு!! பகீர் கிளப்பும் தினகரன்

எடப்பாடி சார் இதுக்கு தான் டெல்லிக்கு போறாரு!! பகீர் கிளப்பும் தினகரன்
கஜா புயல் நிவாரண நிதியைக் கேட்க எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு செல்லவில்லை என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் உருகுலைந்து போயுள்ளனர். கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன. பேயாட்டம் ஆடிய கஜாவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். குடிக்க தண்ணீரின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தவித்து வருகின்றனர்.
எடப்பாடி சார் இதுக்கு தான் டெல்லிக்கு போறாரு!! பகீர் கிளப்பும் தினகரன்
நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்றார்.
 
இதற்கிடையே முதலமைச்சர் மத்திய அரசிடம் நிவாரண நிதி கோர டெல்லியில் பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்க இருக்கிறார்.
எடப்பாடி சார் இதுக்கு தான் டெல்லிக்கு போறாரு!! பகீர் கிளப்பும் தினகரன்
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமமுக பொதுச் செயலாளர் தினகரன் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்க இருப்பது நிவாரண நிதியை கேட்கவா? அல்லது தனிப்பட்ட அரசியல் நிகழ்வுகளுக்காகவா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
சேதாரங்களை முழுவதுமாக கணக்கிடாமலேயே அவர் எப்படி நிவாரண நிதியை கேட்க முடியும் என தினகரன் கேட்டுள்ளார்..