தொடர்புடைய செய்திகள்
- கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!
- டாஸ்மாக் மதுவுக்கு இணையாக கள்ளச்சாராயமும் விற்பனையா? முதல்வருக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி..!
- அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு புதிய பொறுப்பு.. துரைமுருகன் அறிவிப்பு
- விழுப்புரம் மாவட்டப் பொறுப்பாளர்கள் திடீர் மாற்றம்: திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு..!
- டாஸ்மாக் மது பாட்டிலுக்குள் மூடியில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்.. ஆட்டோ டிரைவர் அதிர்ச்சி..!
டாஸ்மாக் மதுபானத்தில் கிக் இல்லை! சட்டமன்றத்தில் அமைச்சர் துரை முருகன் பேச்சு!
அரசு விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுபானத்தில் குடிமகன்களுக்கு தேவையான கிக் இல்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் துறைமுருகன் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை, ஆனால் அரசாங்கம் விற்கும் மதுவில் அவர்களுக்கு தேவையான கிக் இல்லாததால் கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாரத்தை குடிக்கின்றனர் என சட்டமன்றத்தில் அமைச்சர் துறைமுருகன் பேசி உள்ளார்.
மேலும் அரசாங்கம் அவர்களுக்கு சாஃப்ட் டிரிங் போல மாறிவிடுகிறது என்றும் எனவேதான் வீட்டில் பூச்சி விளக்கில் விழுவதைப் போல கள்ளச்சாராயத்தில் விழுகின்றனர் என்றும் அவர் கூறினார்.
அதற்காக தெருவுக்கு தெரு போலீஸ் ஸ்டேஷன் திறக்க முடியாது என்றும் மனிதனாய் பார்த்து தான் திருந்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Edited by Mahendran
