1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (14:00 IST)

இரண்டு பொண்டாட்டி; போதாதற்கு மகளை கட்டாயப்படுத்தி உடலுறவு... தறிகெட்டுப்போன தந்தை

சேலம் மாவட்டம் ஆத்தூரில் மகளை கட்டயப்படுத்தி உடலுறவு கொண்ட காரணத்திற்காக தேடப்பட்டு வந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். 
 
ஆத்தூரை சேர்ந்தவர் சரவணன். கடம்பூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழ்ந்தைகள் உள்ளனர். 
 
இவருக்கும் இவரது மனைவிக்கு அடிக்கடி சண்டை வந்ததால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மூத்த மகள் தந்தையிடமும், இளைய மகள் தாயிடமும் வளர்ந்து வந்தனர். சரவணுக்கு குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. 
 
இந்நிலையில் சம்பவ நாளன்று அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததால் தறிக்கெட்டுபோய் மகளை கட்டயப்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார். இது குறித்து மூத்த மகள் தாயிடம் தெரிவிக்க உடனடியாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. 
 
இது குறித்து தெரிந்துக்கொண்ட சரவணன் தலைமறைவானார். போலீஸார் அவனை தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான். இதில் திடுக்கிடும் தகவல் என்னவெனில், சரவணனுக்கு வேறு பெண்ணுடன் திருமணமாகி அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருந்துள்ளது.