தொடர்புடைய செய்திகள்
- அறிவில்லாத முண்டங்கள் தான் இது போன்று பேசுவார்கள்: ராமதாஸ் ஆவேசம்
- 8 வழிச்சாலை நிறைவேற்றப்படும்: முதல்வர், ராமதாஸ் முன்னிலையில் கட்காரி பேச்சு
- சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரத்து: முதல்வர் அறிவிப்பு
- 8 வழிச்சாலை: விடாமல் துரத்தும் ஆளும் கட்சி; விரக்தியில் மக்கள்
- 8 வழிச்சாலை வழக்கு: உயர்நீதிமன்றத்தில் 8ந் தேதி தீர்ப்பு!!!
8 வழிச்சாலையை மக்கள் விரும்புகிறார்கள் – பொன்னார் விளக்கம் !
நேற்று தமிழகம் வந்த நிதின் கட்கரி 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் எனப் பேசியதை அடுத்து மீண்டும் சர்ச்சைகள் எழ ஆரம்பித்துள்ளன.
நேற்று பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சேலத்தில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி , ராமதாஸ் முன்னிலையில் பேசிய அவர். 8 வழிச்சாலை திட்டத்தை விவசாயிகளின் தேவையை நிறைவேற்றிய பின்னர் செயல்படுத்துவோம் என்றும், நிலம் கையகப்படுத்துவதற்கு நாங்கள் வழக்கத்தை விட தொகையை ஒப்பீட்டளவில் அதிகளவில் உயர்த்தியுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் மீண்டும் 8 வழிச்சாலை பற்றிய சர்ச்சைகள் எழ ஆரம்பித்தன.
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ’ மக்கள் 8 வழிச்சாலை திட்டத்தை விரும்புகிறார்கள். ஆனால் ஒரு சிலரின் தூண்டுதலின் பேராலேயே வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அதைதான் நிதின் கட்கரி கூறினார்’ என விளக்கம் அளித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
