தொடர்புடைய செய்திகள்
- ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கை தமிழர்கள் தமிழகம் வருகை
- இலங்கை பொருளாதார நெருக்கடி: நாட்டில் பழைய கார்கள் மட்டுமே ஓடுவது ஏன்?
- அந்த சமஸ்கிருத உறுதிமொழி அர்த்தம் தெரியுமா? – அன்புமணி ராமதாஸ் கொடுத்த விளக்கம்!
- இலங்கை சீதை கோவிலில் சாமி தரிசனம் செய்த அண்ணாமலை: வைரல் புகைப்படம்!
- இலங்கையில் ராஜபக்ஷக்கள் குடும்பத்தினர் வளர்ந்த கதை - தேசியத் தலைவராக உருவெடுத்த மஹிந்த ராஜபக்ஷ
தமிழா.... எங்கே உன் பெருமை? பாமக ராமதாஸ் வேதனை
தமிழா உன் பெருமை எங்கே என டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில நாட்களாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக பலர் வந்து கொண்டிருக்கின்றனர்
இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ஒரு காலத்தில் உலகை கட்டி ஆட்சி செய்த தமிழன் இன்று வாழ வழியின்றி அகதிகளாக செல்வதா என வேதனையுடன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழா.... எங்கே உன் பெருமை?
தமிழன் என்று சொல்லடா.... தலை நிமிர்ந்து நில்லடா என்றார்கள். ஆனால், இன்று இலங்கையில் வாழ வழியின்றி தமிழர்கள் தமிழகத்திற்கு படையெடுக்கின்றனர். இன்று குழந்தை உள்ளிட்ட 5 பேர் இலங்கையிலிருந்து வந்துள்ளனர். ஈழத்தமிழன் தலை நிமிர்ந்து வாழப்போவது எக்காலம்?
அடுத்த கட்டுரையில்
