தொடர்புடைய செய்திகள்
- திமுகவில் இணைந்த எடப்பாடியார், ட்ரம்ப்!? – குழப்பத்தை உண்டாக்கிய ஆன்லைன் சேர்க்கை!
- பாஜக யாருக்கும் மத்யஸ்தம் செய்யவில்லை... முருகன் சுளீர்!
- நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, காங் எம்பிக்கள் பேரணி:
- கோட்டையில் பாஜக கொடியா... கலாய்த்து விட்ட எடப்பாடியார்??
- நாங்குநேரி தொகுதி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி
ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா... தனியார் மருத்துவமனையில் அனுமதி!
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன.
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரிய வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், நாங்குநேரி அதிமுக எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
