1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK MPs protest in parliament about NEET

நாடாளுமன்ற கூட்டத்தொடர்; நீட் விலக்கு மசோதாவை வலியுறுத்தி திமுக எம்.பிக்கள் ஆர்பாட்டம்!

Tamilnadu
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்ட மசோதாவை முன்னிருத்தி திமுக எம்.பிக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2022ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. நாளை பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ள நிலையில் இன்று குடியரசு தலைவர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையை தொடங்கியபோது தமிழக திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுனர் மத்திய அரசுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
குடியரசுத் தலைவர் உரையில் திருக்குறள்!