தொடர்புடைய செய்திகள்
- சென்னை மெட்ரோ ரயில்களில் வைபை வசதி
- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: ரூ.100ஐ நோக்கி செல்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி
- சென்னையில் இன்று அமைதிப்பேரணி: சாதிப்பாரா அழகிரி?
- நாய்க்கு தவறான சிகிச்சை? மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்நிலையத்தில் புகார்
சென்னை உள்பட 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை!
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ள நிலையில் சென்னை உள்பட 7 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது.
வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதியில் உள்ள துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
