1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 மே 2022 (08:50 IST)

வினாத்தாள் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! – கடலூரில் அதிர்ச்சி சம்பவம்!

கடலூரில் வினாத்தாள் பாதுகாப்பு அறையில் காவல் பணியிலிருந்த காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் வினாத்தாள்கள் லீக் ஆகி விடாமல் இருக்க மாவட்டம்தோறும் வினாத்தாள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு அதற்கு ஆயுதமேந்திய போலீஸ் காவலும் அமைக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வீனஸ் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த தேர்வு வினாத்தாள்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர் காவலர் பெரியசாமி. காவல் பணியில் ஈடுபட்டிருந்த பெரியசாமி தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பெரியசாமி தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.