செவ்வாய், 2 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 26 ஜூலை 2023 (15:18 IST)

அமைச்சர் செந்தில் பலாஜியின் நீதிமன்ற காவல் 3வது முறையாக நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
இந்த நிலையில் அவருடைய நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில் நீதிமன்ற காவலை மீண்டும் 14 நாட்கள் நீடித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
எனவே ஆகஸ்ட் எட்டாம் தேதி வரை மூன்றாவது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran