1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Corona Two Healed and Returned Home

கொரோனா : இருவர் குணமடைந்து வீடு திரும்பினர் !

Corona
தமிழகத்தில் கொரொனா வைரஸ் தொற்றால் இதுவரை 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் 96 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட 834 பேரில் 700க்கும் மேற்பட்டவர்கள்டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தகவல் வெளியாகிறது.

இந்நிலையில், சென்னை கேகே நகரில் ஒரு மளிகைக் கடைக்காரர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கொரொனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவரது குடியிருப்பைச் சுற்றி கண்காணிப்பு போட்டப்பட்டுள்ளது. அத்துடன் அவரது கடைக்கு வந்துசென்றவர்களைக்  கண்டறியும்  முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், ராணிப்பேட்டை  மருத்துவமனையில் சிகிச்சை வந்த  கொரோனா சிகிச்சை பெற்றுவந்த 26 வயது இளைஞர் குணமடைந்து வீடு திரும்பினார்.

அதேபோல் 20 நாட்களாக வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
5000 ஆண்டுக்கு முந்தைய நெருப்புக்கோழி முட்டைகள் - விலகிய மர்மம்!