தொடர்புடைய செய்திகள்
- ஆசிரமத்திற்கு சென்ற மாணவி மர்ம மரணம்! – சாமியாரை கைது செய்து விசாரணை!
- திமுகவுக்கு வாக்கு சேகரித்த வெளிநாட்டவருக்கு சிக்கல்… சாஸ்திரி பவன் நோட்டீஸ்!
- தரமான 8k தரத்துக்கு மாற்றப்படும் மணிரத்னத்தின் பழைய திரைப்படங்கள்!
- பாஜகவுக்கு ஓட்டு கேட்டு போன அதிமுக அமைச்சர்! – கூட்டணி தொடர்கிறதா?
- அஜித்துடன் நான்காவது படமும் நடக்கும்… போனி கபூர் நம்பிக்கை!
பரிசோதனைகளை குறைக்க அறிவுறுத்தல்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பரிசோதனைகளையும் குறைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலாக ஒமிக்ரான் பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கின. இதனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டதுடன், அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு படுக்கைகள் அதிகரிப்பட்டன. மேலும் கொரோனா பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்புகள் குறைந்து வருவதால் கொரோனா பரிசோதனையையும் குறைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அறிகுறிகள் தென்பட்டால் மட்டும் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
