1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2020 (18:24 IST)

தமிழகத்தில் இன்று மேலும் 5,395 பேருக்கு கொரோனா! 62 பேர் பலி

தமிழகத்தில் இன்று கொரோனோவால் 5,395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25 391 பேராக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,572 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம்  இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,69,664 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரொனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் இதுவரை 9,846 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரோனாவால் 1367 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம்1,741,43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.