1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 7 மார்ச் 2022 (14:04 IST)

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தியானத்தில் காங்கிரஸார்: திமுகவிற்கு சிக்கல்!

முதல்வர் சொன்னதுபோல் பதவி விலகுங்கள் என கோரி ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தியானத்தில் ஈடுபட்ட காங்கிரஸார். 

 
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் திமுக கூட்டணிகளுக்கு ஒதுக்கிய பகுதிகளில் திமுகவினரே நின்று வெற்றிபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
 
ஆனால் இன்னும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவியை திமுக நகர செயலாளர் சதிஷ் குமாரின் மனைவி சாந்தி ராஜினாமா செய்யவில்லை. இந்நிலையில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வியுற்ற செல்வமேரி, திமுக தலைமை கூறியதுபோல் கூட்டணி தர்மத்தை பாதுகாக்க சேர்மன் பதவியில் இருந்து உடனடியாக சாந்தி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராஜீவ் நினைவிடத்தில் தியானத்தில் ஈடுபட்டனர்.