1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 17 ஜூலை 2021 (23:14 IST)

அக்டோபர் 1 முதல் கல்லூரிகள் தொடக்கம்

நடப்புக் கல்வியாண்டில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முடித்துவிடவேண்டுமென  பல்கலைகழக மானியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக் கழகம் மானியக் குழு(University grant council) கூறியுள்ளதாவது:

2020-2021 கல்வியாண்டில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முடித்துவிடவேண்டும்; அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து பாடங்கள் தொடங்கப்படவேண்டும் எனக் கூறியுள்ளது. மேலும்  உச்ச நீதிமன்ற அறிவுறைப்படி மாணவர் சேர்க்கை வரும் செப்டம்பர் 30 ஆம்தேதிக்குள் முடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.