தொடர்புடைய செய்திகள்
- உயர் ரக போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த கென்யாவை சேர்ந்த பெண் உட்பட அவரது கூட்டாளிகள் கைது
- கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வெற்றியை தொடர்ந்து - பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணியை வழங்கிய திமுகவினர்.
- 28 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் திமுக பாராளுமன்ற உறுப்பினரை தந்துள்ளனர் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி!
- மக்களவைத் தொகுதியில் திமுக முன்னிலை - திமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்...
- கோவையில் அண்ணாமலை பின்னடைவு.. திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை..!
ஊருக்குள் புகுந்த காட்டு யானை - ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சம்..
கோவை அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை 5க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி சென்றதால் அப்பகுதி மக்களிடையே பெரும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மேற்கு மலை தொடர்ச்சி பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
குறிப்பாக யானைகள் அதிகமாக உள்ளது. இந்த யானைகள் அடிக்கடி மலையை விட்டு இறங்கி ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.
இதனிடைய நேற்று இரவு காருண்யா அடுத்த நல்லூர்வயல் கிராமத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது.அப்போது அங்கு ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள், சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் வாகனத்தையும் சேதப்படுத்தி சென்றுள்ளது.அது மட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் இன்று வாழை மரங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளது.
இந்நிலையில் ஊருக்குள் புகும் யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வனத்திற்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
