தொடர்புடைய செய்திகள்
- 2.46 கோடியா உயர்ந்த மொத்த கொரோனா பாதிப்பு – இந்திய நிலவரம்!
- ரெம்டெவிசிர் மருந்தால் எந்த பயனும் இல்லை: உலக சுகாதார அமைப்பு தகவல்
- இன்று கொரோனா நிவாரண பணம் பெற்றுக்கொள்ள தடையில்லை! – தமிழக அரசு!
- கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை வேண்டாம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
- கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு அரசே காரணம்: ஆர்.எஸ்.எஸ். குற்றச்சாட்டு
சென்னையில் ரயில் சேவைகள் குறைப்பு! – ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை புறநகர் ரயில் சேவைகள் குறைக்கப்படுவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர்த்து மற்ற கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து சென்னையில் புறநகர் சேவைகள் குறைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரை – திருமால்பூர் இடையே வார நாட்களில் 33 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் சேவைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெற்கு ரயிவே தெரிவித்துள்ளது.
