ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 16 மே 2021 (09:13 IST)

இன்று கொரோனா நிவாரண பணம் பெற்றுக்கொள்ள தடையில்லை! – தமிழக அரசு!

தமிழகம் முழுவதும் இன்று முழு முடக்கம் அமலில் உள்ள நிலையில் கொரோனா நிவாரண பணம் பெற்றுக் கொள்ள தடையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. முன்னதாக மதியம் 12 மணி வரை கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முதல் அத்தியாவசிய கடைகள் 8 மணி வரைக்குமே அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முற்றிலும் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டு முழு முடக்கம் தொடர்கிறது.

இந்நிலையில் நேற்று முதலாக தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் கொரோனா நிவாரண பணம் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் இன்றும் டோக்கன் உள்ளவர்கள் ரேசன் கடைகளில் பணம் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.