சென்னையில் ஆளில்லா வீடுகளுக்குள் புகுந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளையடிக்கும் கொள்ளையன் பிடிபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வடபழனி மற்றும் பக்தவத்சலம் பகுதியை சேர்ந்த இரு வெவ்வேறு வீடுகளில் உள்ளோர் வெளியூர் சென்றிருந்தபோது அவர்கள் வீட்டில் பணம், நகை கொள்ளை போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் இரு பகுதியிலும் ஒரே ஆசாமி கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த விசாரணையை தீவிரப்படுத்திய...