1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 டிசம்பர் 2020 (10:21 IST)

போலீஸ்கார் அந்த போனை கொஞ்சம் குடுங்க! – ஃபுல் போதையில் அட்ராசிட்டி செய்த ஆசாமி!

சென்னையில் மதுபோதையில் காவலரை தாக்கி அவரது வாக்கி டாக்கியை பறித்த டிரைவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் கோடம்பாக்கத்தில் போலீஸார் நேற்று இரவு வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக முருகன் என்பவர் கால் டாக்ஸி ஓட்டி வந்துள்ளார். அவரது வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தபோது அவர் ஒருமாதிரியாக பேசவும், அவர் மது குடித்திருப்பதை அறிந்த போலீஸார் அவரை காரை விட்டு வெளியேற சொல்லியிருக்கிறார்கள்.

வெளியே வந்த முருகன் காவலர்களிடம் தாறுமாறாக பேசியதுடன், அங்கிருந்த காவலர் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்த வாக்கிடாக்கியையும் பிடுங்கியுள்ளார். போதையில் இருந்த முருகனை வளைத்து பிடித்த போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.