தொடர்புடைய செய்திகள்
- மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐபிஎல்… மணி நேரத்திற்கு கட்டணம்! – முழு விவரம்!
- ஏப்ரல், மே, ஜூன் 3 மாதங்கள் வெயில் கொளுத்தும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
- கலாஷேத்ரா பாலியல் சர்ச்சை; உதவி பேராசிரியர் தலைமறைவு!
- ஐபிஎல் 203: மழையால் ஆட்டம் நிறுத்தம்! டி.எல்.எஸ் முறையில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி
- பஞ்சாப் கிங்ஸ் லெவன்- கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் மழை குறுக்கீடு
சென்னையில் கொளுத்தும் வெயில்.. ஆனால் 15 மாவட்டங்களில் கனமழை என அறிவிப்பு..!
சென்னையில் இன்று காலை முதல் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் கோடை தொடங்கிவிட்ட நிலையில் சென்னை உள்பட பல பகுதிகளில் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வேலூர், சேலம் உள்பட பல பகுதிகளில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூ,ர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva
