1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 24 மார்ச் 2023 (14:27 IST)

இன்னும் சில மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை அறிவிப்பு..!

இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் மார்ச் 24 ஆம் தேதியான இன்று 10 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் சென்னையை பொருத்தவரை சில இடங்களில் மேகமூட்டமாக இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran