தொடர்புடைய செய்திகள்
- சென்னை கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசிய விவகாரம்.. 18 மாணவர்கள் கூண்டோடு நீக்கம்..!
- மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு: இந்த அரசுக்கு வேறென்ன தலைகுனிவு வேண்டும்? எடப்பாடி பழனிசாமி
- சென்னை பள்ளி மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!
- சென்னை சாலைகள் படுமோசம்- நடிகர் விஜயகாந்த் கண்டனம்
- 23 வயது மகனை இரும்புக்கம்பியால் அடித்தே கொன்ற தாய்.. சென்னையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!
அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இன்று காலை முதல் சென்னையின் பல இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, அரியலூர், திண்டுக்கல், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட 10 மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Edited by Siva
